Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள தக்கோலம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலா என்கிற பார்த்தசாரதி (வயது 30), சுகுமார் (26) கூலி தொழிலாளர்கள்.
நேற்று இரவு இவர்கள் தக்கோலம் அருகே உள்ள சேர்ந்தமங்கலம் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். சுகுமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த பார்த்தசாரதியை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பார்த்தசாரதி பரிதாபமாக இறந்தார்.
ரெயில்வே போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.